Skip to content

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டங்கள்

எங்கள் கூட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் எங்கள் கூட்டங்கள் எங்கே நடக்கின்றன என்று கண்டுபிடியுங்கள்.

இடத்தைக் கண்டுபிடியுங்கள் (opens new window)

எங்களது கூட்டங்களில் என்ன நடக்கிறது?

யெகோவாவின் சாட்சிகள் வாரத்தில் இரண்டு முறை வணக்கத்திற்காக கூடிவருகிறார்கள். (எபிரெயர் 10:24, 25) இந்தக் கூட்டங்களில், பைபிள் சொல்வதையும், அது கற்பிப்பதை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கலாம் என்பதையும் ஆராய்கிறோம்; இவற்றிற்கு வரும்படி பொதுமக்களையும் அழைக்கிறோம்.

எங்களது கூட்டங்கள் பெரும்பாலானவற்றில் பள்ளிக்கூட கலந்தாலோசிப்பு போல இருக்கும். விருப்பப்பட்டவர்கள் பதில் சொல்லலாம். கூட்டங்களின் ஆரம்பத்திலும் முடிவிலும் பாட்டும் ஜெபமும் இருக்கும்.

நீங்கள் யெகோவாவின் சாட்சியாக இல்லாவிட்டாலும் எங்களது கூட்டங்களுக்கு வரலாம். அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கிறோம். அனுமதி இலவசம். எந்த காணிக்கையும் வசூலிக்கப்படுவதில்லை.