எசேக்கியேல் 35:1-15

35  யெகோவா மறுபடியும் என்னிடம்,  “மனிதகுமாரனே, சேயீர்+ மலைப்பகுதிக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அதற்கு எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்:+  ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “சேயீர் மலைப்பகுதியே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன். உன்னைத் தண்டித்து, உன்னை வெறும் பொட்டல் காடாக்குவேன்.+  உன்னுடைய நகரங்களை நாசமாக்குவேன். நீ வெறும் பொட்டல் காடாக ஆவாய்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வாய்.  நீ பல காலமாக இஸ்ரவேலர்கள்மேல் பகையைக் காட்டிவருகிறாய்.+ அவர்களுக்கு இறுதி தண்டனை கிடைத்த நாளிலே,+ அதாவது அழிவு நாளிலே, அவர்களை எதிரிகளிடம் பிடித்துக் கொடுத்து வாளுக்குப் பலியாக்கினாய்.”’  அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இரத்தம் சிந்தப்படுவதற்காக நான் உன்னைத் தயாராக்குவேன், சீக்கிரத்தில் உன் இரத்தம் சிந்தப்படும்.+ நீ இரத்தத்தை வெறுத்ததால் சீக்கிரத்தில் உன் இரத்தமே சிந்தப்படும்.+  சேயீர் மலைப்பகுதியே, நான் உன்னைப் பொட்டல் காடாக்குவேன்.+ உன் இடத்துக்கு வந்து போகிற எல்லாரையும் கொன்றுபோடுவேன்.  உன்னுடைய மலைகளைப் பிணங்களால் நிரப்புவேன். வாளால் வெட்டப்பட்டவர்கள் உன்னுடைய குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஓடைகளிலும் கிடப்பார்கள்.  நான் உன்னை அடியோடு அழித்துவிடுவேன். உன்னுடைய நகரங்களில் இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள்.+ அப்போது, நான் யெகோவா என்று நீ தெரிந்துகொள்வாய்.’ 10  ‘இந்த இரண்டு தேசங்களும் எனக்குச் சொந்தமாகும், இரண்டையுமே நாங்கள் கைப்பற்றுவோம்’+ என்று நீ சொன்னாய். யெகோவா அங்கே இருந்தும் நீ அப்படிச் சொன்னாய். 11  அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீ அவர்கள்மேல் பொறாமைப்பட்டு எந்தளவுக்கு வெறுப்பையும் கோபத்தையும் காட்டினாயோ அந்தளவுக்கு நான் உனக்குப் பதிலடி கொடுப்பேன்.+ உன்னைத் தண்டிக்கும்போது, நான் யார் என்று அவர்களுக்குக் காட்டுவேன். 12  நீ இஸ்ரவேலின் மலைகளுக்கு எதிராகத் திமிரோடு பேசினாய். “அவை பாழாக்கப்பட்டன, நமக்கு இரையாகக் கொடுக்கப்பட்டன” என்று சொன்னாய். இதையெல்லாம் யெகோவாவாகிய நான் கேட்டேன் என்று அப்போது நீ தெரிந்துகொள்வாய். 13  நீ எனக்கு எதிராக ஆணவத்தோடு வாய்மூடாமல் பேசிக்கொண்டே இருந்தாய்.+ அதையெல்லாம் நான் கேட்டேன்.’ 14  உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் உன்னை அழித்துப் பாழாக்கும்போது உலகமே சந்தோஷப்படும். 15  இஸ்ரவேலர்களுடைய தேசம் பாழாக்கப்பட்டபோது நீ சந்தோஷப்பட்டாயே. அதற்குத் தகுந்த பதிலடியை நான் கொடுப்பேன்.+ சேயீர் மலைப்பகுதியே, நீ பாழாகிப்போவாய். ஏதோம் முழுவதும் அழிந்து நாசமாகும்.+ அப்போது, நான் யெகோவா என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்’” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா