Skip to content

யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மதம் மட்டும்தான் உண்மையென நம்புகிறார்களா?

யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மதம் மட்டும்தான் உண்மையென நம்புகிறார்களா?

 தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மதத்தை கடவுள் ஏற்றுக்கொள்வாரா என மத பற்றுடையவர்கள் ஆழமாக யோசித்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் அதை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள், அல்லவா?

 இரட்சிப்பிற்கு வழிநடத்துகிற அநேக மதங்கள் அல்லது அநேக வழிகள் இருக்கின்றன என்ற கருத்தை இயேசு கிறிஸ்து ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, “வாழ்வுக்கு வழிநடத்தும் வாசல் இடுக்கமாகவும், பாதை குறுகலாகவும் இருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 7:14) யெகோவாவின் சாட்சிகள் அந்த பாதையை கண்டுபிடித்துவிட்டதாக நம்புகிறார்கள். இல்லையென்றால், அவர்கள் வேறோரு மதத்தை தேடி இருப்பார்கள்.