பாடல் 103
மேய்ப்பர்கள்—கடவுள் தரும் பரிசு
-
1. அன்பு நிறைந்த மேய்ப்பர்களை,
நம் தேவன் தந்தாரே.
நல்வழி காட்டும் நண்பர்களை,
நம் வாழ்வில் தந்தாரே.
(பல்லவி)
மந்தையை காத்திடும் மேய்ப்பர்கள்,
தேவன் தரும் பரிசே.
சந்தோஷமாய் நம்மை காப்பார்கள்.
நம் மனதை வென்றார்கள்.
-
2. சில்லென்று வீசும் தென்றலை போல்,
நம் அன்பு மூப்பர்கள்.
சோர்ந்திடும் நேரம் ஓடிவந்து,
தாங்கிடும் நண்பர்கள்.
(பல்லவி)
மந்தையை காத்திடும் மேய்ப்பர்கள்,
தேவன் தரும் பரிசே.
சந்தோஷமாய் நம்மை காப்பார்கள்.
நம் மனதை வென்றார்கள்.
-
3. மந்தையில் உள்ள ஆடுகளின்,
தேவைகள் தீர்க்கவே.
மேய்ப்பர்கள் செய்யும் தியாகங்களை,
நெஞ்சாரப் போற்றுவோம்.
(பல்லவி)
மந்தையை காத்திடும் மேய்ப்பர்கள்,
தேவன் தரும் பரிசே.
சந்தோஷமாய் நம்மை காப்பார்கள்.
நம் மனதை வென்றார்கள்.
(பாருங்கள்: ஏசா. 32:1, 2; எரே. 3:15; யோவா. 21:15-17; அப். 20:28.)