Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அரசாங்கத்தில் மக்கள் “அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:11

பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் என்ன சொல்கிறது?

வாழ்க்கையின் கவலைகளைச் சமாளிக்க பைபிள் உங்களுக்கு உதவுமா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • உதவும்

  • உதவாது

  • உதவலாம்

பைபிள் தரும் பதில்

“[கடவுள்] உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.” (1 பேதுரு 5:7) கவலைகளைச் சமாளிக்க கடவுள் உதவி செய்வார் என்ற நம்பிக்கையை பைபிள் தருகிறது.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • ஜெபம் செய்யும்போது நமக்கு “தேவசமாதானம்” கிடைக்கும். இது, கவலைகளில் மூழ்கிவிடாமல் இருக்க உதவுகிறது.—பிலிப்பியர் 4:6, 7.

  • அதோடு, பைபிளைப் படிப்பதன் மூலம் நம்மால் மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியும்.—மத்தேயு 11:28-30.

கவலைகளே இல்லாத வாழ்க்கை கிடைக்குமா?

சிலர் சொல்கிறார்கள் . . . கவலையும் மன அழுத்தமும் மனிதர்களுடைய வாழ்க்கையின் ஒரு பாகம். இன்னும் சிலர் சொல்கிறார்கள், செத்த பிறகுதான் கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பைபிள் தரும் பதில்

கவலைகளுக்குக் காரணமாக இருக்கும் எல்லாவற்றையும் கடவுள் நீக்கப்போகிறார். “இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:4.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?