Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் கஷ்டங்கள்தான், இதுக்கெல்லாம் கடவுள்தான் காரணமா?

பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் என்ன சொல்கிறது?

கஷ்டங்களுக்கு கடவுள்தான் காரணமா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • ஆம்

  • இல்லை

  • இருக்கலாம்

பைபிள் தரும் பதில்

“கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.” (யோபு 34:10) அதனால், இன்று நமக்கு வரும் கஷ்டங்களுக்கும் உலகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கும் கடவுள் ஒருபோதும் காரணம் இல்லை.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • இந்த “உலகத்தை ஆளுகிற” சாத்தான்தான் நம்முடைய கஷ்டங்களுக்கெல்லாம் முக்கியமான காரணம். —யோவான் 14:30.

  • நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள்கூட நமக்கு வரும் பிரச்சினைகளுக்கும் கஷ்டங்களுக்கும் காரணமாக இருக்கலாம்.—யாக்கோபு 1:14, 15.

கஷ்டங்களுக்கு முடிவு வருமா?

சிலர் சொல்கிறார்கள்...

எல்லாரும் ஒன்றுசேர்ந்து முயற்சி செய்தால் நம்முடைய பிரச்சினைகளுக்கு முடிவுகட்டலாம். இன்னும் சிலர் சொல்கிறார்கள்... அப்படியே முயற்சி செய்தாலும் இந்த உலகத்தில் பெரிய மாற்றம் எதுவும் கொண்டுவர முடியாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பைபிள் தரும் பதில்

கடவுள் நம்முடைய கஷ்டங்களுக்கெல்லாம் முடிவுகட்டுவார். “இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • சாத்தானால் வந்த எல்லா பிரச்சினைகளையும் இயேசு மூலமாக கடவுள் சரிசெய்வார்.—1 யோவான் 3:8.

  • நல்ல மக்கள் இந்தப் பூமியில் சமாதானமாக என்றென்றும் வாழ்வார்கள்.—சங்கீதம் 37:9-11, 29.