Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மருவு

மருவு

மெல்லிய கிளைகளையும் இலைகளையும் கொண்ட செடி; சுத்திகரிப்பு சடங்குகளின்போது, இரத்தத்தையோ தண்ணீரையோ தெளிப்பதற்காக இது பயன்படுத்தப்பட்டது. இதற்காக பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிற எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் பல்வேறு வகையான செடிகளைக் குறிக்கலாம். யோவான் 19:29-ல் சொல்லப்பட்டிருப்பது, ஒரு கிளையில் கட்டப்பட்டிருந்த ஒருவகை மருவுச்செடியாக (ஆரிகேனம் மாரு; ஆரிகேனம் சிரியாக்கம்) இருந்திருக்கலாம்; அல்லது, சோளப்பயிர் வகையை (சோர்கம் வல்கேர்) சேர்ந்ததாக இருந்திருக்கலாம். ஏனென்றால், புளிப்பான திராட்சமதுவில் முக்கியெடுக்கப்பட்ட கடற்பஞ்சை இயேசுவின் வாய்க்குப் பக்கத்தில் கொண்டுபோகும் அளவுக்கு அதன் தண்டு நீளமாக இருந்தது.—யாத் 12:22; சங் 51:7.