நீதிமொழிகள் 5:1-23

5  என் மகனே, நான் சொல்கிற ஞானமான வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேள். பகுத்தறிவை நான் போதிக்கும்போது கவனமாகக் கேள்.+   அப்போது, யோசிக்கும் திறனை நீ பாதுகாத்துக்கொள்வாய்.உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.+   நடத்தைகெட்ட பெண்ணின் வார்த்தைகள்* தேன்போல் தித்திக்கும்.+அவளுடைய பேச்சு* எண்ணெயைவிட மென்மையாக இருக்கும்.+   ஆனால், அவளுடைய சகவாசம் முடிவில் எட்டியை* போலக் கசக்கும்.+இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்கும் வாளைப் போலக் குத்தும்.+   அவளுடைய கால் சவக்குழிக்குள் இறங்கும். அவளுடைய காலடிகள் நேராகக் கல்லறைக்குப் போகும்.   வாழ்வின் பாதையைப் பற்றி அவள் யோசிப்பதே இல்லை. எங்கு போகிறாள் என்றே தெரியாமல் மனம்போன போக்கில் போகிறாள்.   என் மகன்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.என் வார்த்தைகளைவிட்டு விலகாதீர்கள்.   மகனே, அவளைவிட்டு நீ தூரமாக விலகியிரு.அவளுடைய வீட்டு வாசல் பக்கம்கூட போகாதே.+   அப்போதுதான், உன் பெயரைக் கெடுத்துக்கொள்ள மாட்டாய்.+வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட மாட்டாய்.+ 10  இல்லையென்றால், உன் சொத்துகளை முன்பின் தெரியாதவர்கள் சுரண்டிக்கொள்வார்கள்.+நீ கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததெல்லாம் அன்னியர்களின் வீட்டுக்குப் போய்விடும். 11  உன் வாழ்க்கையின் முடிவிலே உன் பலம் குறைந்து,உன் உடல் உருக்குலையும்போது நீ வேதனையில் முனகுவாய்.+ 12  அப்போது, “புத்திமதியை வெறுத்தேனே! கண்டிப்பை என் இதயம் அலட்சியம் செய்ததே! 13  என் போதகர்களின் பேச்சைக் கேட்காமல் போய்விட்டேனே!எனக்கு உபதேசம் பண்ணினவர்கள் சொன்னதைக் காதில் வாங்காமல் போனேனே! 14  இப்போது என் வாழ்க்கையே நாசமாய்ப் போய்விட்டதே.முழு சபைக்கும் முன்னால் தலைகுனியும் நிலைமை வந்துவிட்டதே!”+ என்று புலம்புவாய். 15  உன் தொட்டியில் இருக்கும் தண்ணீரை மட்டும் குடி.உன் கிணற்றில் ஊறும் தண்ணீரை மட்டும் குடி.+ 16  உன் நீரூற்றுகள் ஏன் வெளியே பாய்ந்தோட வேண்டும்?உன் நீரோடைகள் ஏன் பொது சதுக்கங்களில் வழிந்தோட வேண்டும்?+ 17  அவை உனக்கு மட்டும்தான் சொந்தம்.முன்பின் தெரியாதவர்களோடு அவற்றைப் பங்குபோட்டுக்கொள்ளாதே.+ 18  உன்னுடைய நீரூற்றே உனக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும்.இளவயதில் கைப்பிடித்த உன் மனைவியோடு சந்தோஷமாக இரு.+ 19  அவள் பாசமான ஒரு பெண் மான், அழகான வரையாடு.+அவளுடைய மார்புகள் எப்போதும் உன்னை மகிழ்விக்கட்டும்.அவளுடைய அன்பில் நீ எப்போதும் மயங்கியிரு.+ 20  என் மகனே, நடத்தைகெட்ட பெண்ணிடம் நீ ஏன் மயங்க வேண்டும்?ஒழுக்கங்கெட்ட பெண்ணின் மார்பை ஏன் தழுவ வேண்டும்?+ 21  மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கின்றன.அவனுடைய பாதைகளையெல்லாம் அவர் ஆராய்கிறார்.+ 22  பொல்லாதவன் செய்கிற குற்றங்களே அவனைக் கண்ணிபோல் பிடித்துக்கொள்ளும்.அவன் செய்கிற பாவங்களே அவனைக் கயிறுபோல் இறுகச் சுற்றிக்கொள்ளும்.+ 23  அவன் புத்திமதியைக் கேட்காததால் செத்துப்போவான்.அடிமுட்டாளாக இருப்பதால் வழிதவறிப் போவான்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உதடுகள்.”
நே.மொ., “வாய்.”
மூலமொழியில், பாலஸ்தீனாவில் வளரும் ஒரு கசப்பான செடி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா