நீதிமொழிகள் 6:1-35

6  என் மகனே, நீ ஒருவனுடைய கடனுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டால்,+முன்பின் தெரியாதவனோடு கைகுலுக்கி ஒப்பந்தம் செய்துகொண்டால்,+   உத்தரவாதம் கொடுத்துவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டால்,வாக்குக் கொடுத்துவிட்டு பிரச்சினையில் சிக்கிக்கொண்டால்,+   என் மகனே, நான் சொல்வதுபோல் செய்து அதிலிருந்து தப்பித்துக்கொள்.நீ அவனிடம் நன்றாக மாட்டிக்கொண்டதால், அவசரமாகப் போய், உன்னையே தாழ்த்தி, அவனிடம் கெஞ்சு.+   அதுவரைக்கும் கண் அசந்துவிடாதே.உன் கண் இமைகளை மூடவிடாதே.   வேட்டைக்காரனின் கையிலிருந்து தப்பிக்கிற கலைமானை* போலவும்,வேடனின் கையிலிருந்து தப்பிக்கிற பறவையைப் போலவும் நீ தப்பித்துக்கொள்.   சோம்பேறியே, நீ போய் எறும்பைப் பார்.+அது செய்வதையெல்லாம் கவனித்து, ஞானத்தைப் பெற்றுக்கொள்.   அதற்குத் தலைவனும் இல்லை, அதிகாரியும் இல்லை, அரசனும் இல்லை.   ஆனாலும், கோடைக் காலத்தில் உணவைச் சேமித்து வைக்கிறது.+அறுவடைக் காலத்தில் உணவுப் பொருள்களைச் சேர்த்து வைக்கிறது.   சோம்பேறியே, எவ்வளவு நேரம்தான் படுத்திருப்பாய்? எப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பாய்? 10  “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்”+ என்று சொன்னால், 11  வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+ 12  உதவாக்கரையாகவும் அயோக்கியனாகவும்* இருப்பவன் பொய் பேசிக்கொண்டு அலைகிறான்.+ 13  கண்ணால் ஜாடை காட்டுகிறான்,+ காலைத் தட்டியும், விரல்களை ஆட்டியும் சைகை காட்டுகிறான். 14  அவனுடைய உள்ளம் நெறிகெட்டுப்போயிருப்பதால்,எப்போதும் சதித்திட்டம் தீட்டுகிறான்,+ சண்டை சச்சரவுகளை மூட்டிவிடுகிறான்.+ 15  அதனால், அவனுக்குத் திடீரென்று அழிவு வரும்.நொடிப்பொழுதில் நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+ 16  யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார். 17  அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+ 18  சதித்திட்டங்கள் போடுகிற இதயம்,+ கெட்டதைச் செய்ய வேகமாக ஓடுகிற கால்கள், 19  மூச்சுக்கு மூச்சு பொய் சாட்சி சொல்லுதல்,*+சகோதரர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகளை மூட்டிவிடுதல்.*+ 20  என் மகனே, உன் அப்பா கொடுக்கிற கட்டளைக்குக் கீழ்ப்படி.உன் அம்மா கொடுக்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளாதே.+ 21  அவற்றை எப்போதும் உன் இதயத்தில் பதிய வைத்துக்கொள்.உன் கழுத்தில் கட்டிக்கொள். 22  நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்.நீ படுக்கும்போது அவை உன்னைக் காவல்காக்கும்.நீ எழுந்திருக்கும்போது அவை உன்னிடம் பேசும். 23  கட்டளைதான் விளக்கு.+சட்டம்தான் வெளிச்சம்.+கண்டிப்பும் புத்திமதியும்தான் வாழ்வின் வழி.+ 24  அவை நடத்தைகெட்ட பெண்ணிடமிருந்தும்,+அவளுடைய வசீகரப் பேச்சிலிருந்தும் உன்னைப் பாதுகாக்கும்.+ 25  உன் உள்ளத்தில் அவளுடைய அழகை ரசிக்காதே.+அவளுடைய மயக்கும் பார்வையில் மயங்கிவிடாதே. 26  ஏனென்றால், விபச்சாரியிடம் போகிறவன் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுவான்.+நடத்தைகெட்ட மனைவி ஒருவனுடைய அருமையான உயிருக்கே உலை வைத்துவிடுவாள். 27  ஒருவன் நெருப்புத்தணலை நெஞ்சோடு வைத்துக்கொண்டால் அவனுடைய உடை கருகாமல் இருக்குமா?+ 28  ஒருவன் எரிகிற தணல்மேல் நடந்தால் அவனுடைய பாதங்கள் வெந்துபோகாமல் இருக்குமா? 29  அடுத்தவனுடைய மனைவியோடு உறவுகொள்பவனுக்கும் இதே கதிதான்.அவளைத் தொடுகிற எவனும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.+ 30  வயிற்றுப் பசிக்காக ஒருவன் திருடினால்,மக்கள் அவனைக் கேவலமாகப் பேச மாட்டார்கள். 31  ஆனால் அவன் பிடிபடும்போது, ஏழு மடங்கு திருப்பித்தர வேண்டியிருக்கும்;தன் வீட்டில் இருக்கும் விலைமதிப்புள்ள பொருள்களையெல்லாம் கொடுக்க வேண்டியிருக்கும்.+ 32  அடுத்தவனுடைய மனைவியோடு உறவுகொள்கிறவன் புத்தி இல்லாதவன்.அவன் தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்.+ 33  அவனுக்கு வேதனையும்* தலைகுனிவும்தான் மிஞ்சும்.+அவனுக்கு ஏற்படும் அவமானத்தைப் போக்கவே முடியாது.+ 34  பொறாமையால் அவளுடைய கணவன் கொதித்தெழுவான்.பழிவாங்கும்போது கொஞ்சம்கூட இரக்கம் காட்ட மாட்டான்.+ 35  நஷ்ட ஈடாக எதைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.எவ்வளவு பெரிய அன்பளிப்பைக் கொடுத்தாலும் சமாதானம் ஆக மாட்டான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “நவ்வி மானை.”
வே.வா., “பொல்லாதவனாகவும்.”
வே.வா., “மூட்டிவிடுபவன்.”
வே.வா., “சொல்பவன்.”
நே.மொ., “காயங்களும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா