யோபு 6:1-30

6  அதற்கு யோபு,   “என்னுடைய வேதனையை+ எடை போட்டுப் பாருங்கள்.என் கஷ்டங்களையும் தராசில் நிறுத்திப் பாருங்கள்.   அது கடற்கரை மணலைவிட கனமாக இருக்கும். அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் ஏதேதோ* பேசிவிட்டேன்.+   சர்வவல்லமையுள்ளவரின் அம்புகள் என்னைக் குத்திக் கிழித்தன.அவற்றின் விஷம் என் உடம்பில் ஏறிக்கொண்டிருக்கிறது.+கடவுள் என்னை மாறிமாறி தாக்குவதால் நான் பயந்துபோயிருக்கிறேன்.   புல் இருக்கும்போது காட்டுக் கழுதை+ கனைக்குமா?தீவனம் இருக்கும்போது காளை கத்துமா?   ருசியில்லாத சாப்பாட்டை உப்பில்லாமல் சாப்பிட முடியுமா?செடியின் வழுவழுப்பான சாறில் ருசி இருக்குமா?   அதையெல்லாம் தொடக்கூட எனக்குப் பிடிக்கவில்லை. பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது.   கடவுள் என் வேண்டுதலைக் கேட்டு,என் ஆசையை நிறைவேற்றி,   என்னை ஒழித்துக்கட்டக் கூடாதா?அவருடைய கையாலேயே என்னைக் கொன்றுபோடக் கூடாதா?+ 10  அப்போதுதான் எனக்கு நிம்மதி கிடைக்கும்.மரண வலியைக்கூட சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.ஏனென்றால், பரிசுத்தமான கடவுளின்+ பேச்சை நான் மறுக்கவில்லையே.* 11  இன்னும் காத்துக்கொண்டிருக்க என் உடம்பில் பலம் ஏது?+ இனி நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? 12  நான் என்ன பாறாங்கல்லா? என் உடம்பு என்ன வெண்கலமா? 13  எனக்கென்று இருந்ததெல்லாம் பறிபோய்விட்டதே.இனி என்னை நானே எப்படிக் கவனித்துக்கொள்வேன்? 14  மனுஷனுக்கு விசுவாசமாக இல்லாதவன்*+சர்வவல்லமையுள்ளவரின் மேல் பயபக்தியாய் இருக்க மாட்டான்.+ 15  என் சகோதரர்கள் எனக்கு ஏமாற்றம் அளிக்கிறார்கள்.+அவர்கள் வற்றிப்போன குளிர் கால நீரோடைபோல் இருக்கிறார்கள். 16  அதன் கலங்கலான தண்ணீர் உறைபனி போல இறுகிக் கிடக்கிறது.அதன் அடியில் இருக்கும் பனிக்கட்டி உருகி ஓடுகிறது. 17  கோடைக் காலத்தில் அது காய்ந்துபோகிறது.வெயில் காலத்தில் வறண்டுபோகிறது. 18  அதன் பாதை மாறுகிறது.பாலைவனத்துக்குள் ஓடுகிறது, பின்பு காணாமல் போகிறது. 19  தீமாவின்+ பயணிகள் தண்ணீரைத் தேடி வருகிறார்கள்.சீபாவிலிருந்து வருகிறவர்கள்*+ அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 20  நம்பிக்கை வீண்போனதால் அவர்கள் அவமானம் அடைகிறார்கள்.எதிர்பார்த்தது கிடைக்காததால் ஏமாற்றம் அடைகிறார்கள். 21  நீங்களும் எனக்கு அந்த நீரோடை போலத்தான் இருக்கிறீர்கள்.+எனக்கு ஏற்பட்ட கொடுமைகளைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்.+ 22  ‘எனக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று உங்களைக் கேட்டேனா? எனக்காக யாரிடமாவது பணம் கொடுக்கச் சொன்னேனா? 23  எதிரியின் கையிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி கெஞ்சினேனா?கொடுமைக்காரர்களின் கையிலிருந்து விடுதலை செய்யும்படி வேண்டினேனா? 24  எனக்குக் கொஞ்சம் சொல்லுங்கள், நான் அமைதியாக இருந்துவிடுகிறேன்.+என் தப்பை உணர்த்துங்கள். 25  உள்ளதை உள்ளபடி சொல்வது வேதனை தராது.+ ஆனால் நீங்கள் என்னைக் கண்டிப்பதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?+ 26  என் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி என்னைக் கண்டிக்க சதி செய்கிறீர்களா?விரக்தியில் பேசுகிறவனுடைய வார்த்தைகள்+ காற்றோடு காற்றாகப் போய்விடுவதில்லையா? 27  அப்பா இல்லாத பிள்ளைகள்மீதும் நீங்கள் குலுக்கல் போடுவீர்கள்.+சொந்த நண்பனையே விற்றுவிடுவீர்கள்.*+ 28  இப்போது என் முகத்தைப் பாருங்கள்.உங்கள் முகத்துக்கு நேராக நான் ஏன் பொய் சொல்லப்போகிறேன்? 29  என்னைப் பற்றித் தப்பாக நினைக்காதீர்கள்; தயவுசெய்து உங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.நீங்களே யோசித்துப் பாருங்கள்; நான் இன்னும் நீதிநேர்மையோடுதான் நடக்கிறேன். 30  நான் ஏதாவது அநியாயமாகப் பேசுகிறேனா? எனக்கு வந்த கஷ்டத்தைப் பற்றிப் புரியாமல் பேசுகிறேனா?” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “யோசிக்காமல் கொள்ளாமல்.”
வே.வா., “தட்டவில்லையே.”
வே.வா., “மாறாத அன்பு காட்டாதவன்.”
வே.வா., “பயணம் செய்கிற சபேயர்கள்.”
வே.வா., “பேரம் பேசுவீர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா