Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை

பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது...

பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது...

“அழாத, கண்ணு. . . .  எல்லாம் . . .  நல்லதுக்குதான்”

இந்த வார்த்தைகளை சவ அடக்கத்தின்போது பீபி என்ற பெண்ணிடம் ஒருவர் சொன்னார். அந்தப் பெண்ணின் அப்பா ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்!

பீபிக்கு அப்பா என்றால் உயிர். அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் ஒருவர் நல்ல எண்ணத்தோடுதான் இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஆனால் அந்த வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலாக இல்லை, மனதை நோகடிப்பது போலத்தான் இருந்தன. “அப்படினா, எங்கப்பா செத்தது நல்லதுக்கா?” என்ற கேள்வி அவளுடைய மனதில் அடிக்கடி ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. பல வருஷங்களுக்குப் பின்பு இந்தச் சம்பவத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டபோது இன்னும் அவள் வேதனையில்தான் இருந்தாள்.

பீபியின் விஷயத்தில் பார்த்தப்படி, யாராவது இறந்துபோகும்போது அந்தத் துக்கத்திலிருந்து மீண்டுவர ஒருவருக்கு ரொம்ப நாள் ஆகும், அதுவும் உயிருக்கு உயிரானவர்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. மரணத்தை “கடைசி எதிரி” என்று பைபிள் சரியாகத்தான் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:26) மரணம் எல்லாருடைய வாழ்க்கையிலும் வருகிறது. அது நம் நெஞ்சைப் பிளக்கிறது. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அது திடீரென்று ஏற்படுகிறது, நமக்குப் பிரியமானவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுகிறது. மரணத்தின் தாக்குதலிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது. அதனால்தான், சாவையும் அதனால் உண்டாகும் பாதிப்புகளையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறோம். ஆனால் அது இயல்புதான்.

ஒருவேளை நீங்கள் இப்படி யோசித்திருக்கலாம்: ‘துக்கத்திலிருந்து மீண்டுவர எவ்வளவு நாளாகும்? துக்கத்திலிருந்து எப்படி மீண்டுவர முடியும்? அன்பானவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியுமா?’ (w16-E No. 3)